Raguveeradayal's profileதிருதிருPhotosBlogListsMore Tools Help

திருதிரு

தென்னன் தமிழாலே மேலோர் சொல் வார்த்தை தெளிவோமே
Photo 1 of 5
Thanks for visiting!
Please wait...
Sorry, the comment you entered is too long. Please shorten it.
You didn't enter anything. Please try again.
Sorry, we can't add your comment right now. Please try again later.
To add a comment, you need permission from your parent. Ask for permission
Your parent has turned off comments.
Sorry, we can't delete your comment right now. Please try again later.
You've exceeded the maximum number of comments that can be left in one day. Please try again in 24 hours.
Your account has had the ability to leave comments disabled because our systems indicate that you may be spamming other users. If you believe that your account has been disabled in error please contact Windows Live support.
Complete the security check below to finish leaving your comment.
The characters you type in the security check must match the characters in the picture or audio.
Raguveerad​ayalwrote:
நன்றி திரு சேந்தன் ! மதுரை மண்ணின் மைந்தர்  தமிழ் சுவைப்பதில் மிக்க மகிழ்ச்சி!
Dec. 6
வாழ்க வளமுடன்   !
Dec. 4
June 26

விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

ஆழ்வார்கள் அருளிச் செயலிலிருந்து தொகுத்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 4வது பகுதி
 
4.
 

திருமக ளார்தனிக் கேள்வன் அருள்க;
பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க;
ஆலி னிலைப்பெரு மானே அருள்க;
மால்விடை ஏழ்செற் றவனே அருள்க;
தெள்ளிய சிங்கம் அருள்க;  கொள்ளை
கொள்ளிக் குறும்பன்அருள்க;  யார்க்கும்
அறிவரு மாயன்அருள்க;  ஏழேழ்
பிறவி யறுப்பான் அருள்க;  இமையவர்
தந்தைதாய் அருள்க;  தவமுனி அருள்க;                                          610
எந்தையே அருள்க;  ஏற்பரன் அருள்க;
ஒடியா இன்பப் பெருமையன் அருள்க;
படுகடல் அமுதே அருள்க;  பத்தர்கள்
நுகர்கனி அருள்க;  நூல்மார்ப அருள்க;
பகல்க ரந்தச்சுடர் ஆழியான் அருள்க;
ஆயர் பாடிவிளக்கே அருள்க;
வாய்முதல் அப்பன் அருள்க;  வானவர்
புகலிடம் அருள்க;  புள்வலான் அருள்க;                                           621.
வகையால் அவனி இரந்தான் அருள்க;
எங்கள்செல் சார்வே அருள்க;  வடிவார்
சங்கம் கொண்டான் அருள்க;  உலகுய்ய
நின்றான் அருள்க; நெடியோன் அருள்க;
குன்றே குடையா எடுத்தான் அருள்க;
மழுவியல் படையான் அருள்க; வேதாந்த
விழுமிய பொருளான் அருள்க; வேத
முதற்பொருள் அருள்க; முனைவன் அருள்க;                                      631.
மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க;
வானவர் கொழுந்தே அருள்க;  மூவா
வானவன் அருள்க; வாசுதேவன் அருள்க;
வண்ணம் அழகிய நம்பி அருள்க;
எண்ணில் மூர்த்தி அருள்க;  என்னுயிர்க்
காவலன் அருள்க; காகுத்தன் அருள்க;
கோவிந்தன் அருள்க;  கோவர்த்தன் அருள்க;                                     641.
சாமவேதியன் அருள்க;  செய்ய
தாமரைக் கண்ணன் அருள்க; தாமரைத்
தாளான் அருள்க; தாசரதி அருள்க;
தோளா மாமணி அருள்க;  தொண்டர்க்கு
இனியான் அருள்க; இருடிகேசன் அருள்க;
பனிமல ராள்வலம் கொண்டான் அருள்க;
கோல வராகன் அருள்க; கருமுகில்                                                      650
போலும் உருவன் அருள்க; தொழுவார்
சிந்தை பிரியான் அருள்க; சேது
பந்தம் திருத்தினான் அருள்க; பத்தர்க்கு
அமுதே அருள்க; அளப்பில்ஆ ரமுதை
அமரர்க் கருளும் விளக்கே அருள்க;
நரனே அருள்க;  நந்தகோ பன்இள
வரசே அருள்க; ஜம்பால் ஓதியை
ஆகத்து இருத்தினான் அருள்க;  கடலுள்
நாக மேந்தித் துயின்றான் அருள்க;                                                         660
நாந்தக மேந்திய நம்பி அருள்க;
கூந்த லார்மகிழ் கோவலன் அருள்க;
குறியமா ணெம்மான் அருள்க; கூந்தல்வாய்
நெறியக் கீண்டான் அருள்க; நெறிமையால்
நினையவல் லார்கதி அருள்க; தன் அடியார்க்கு
இனியான் அருள்க; எனக்கரசு அருள்க;
துத்திசேர் நாகத்து அணையான்  அருள்க;
அத்தம் அடுத்த பத்தாம் நாளில்
தோன்றினான் அருள்க; மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்றுரு வானான் அருள்க;
பாற்கடல் வண்ணன் அருள்க; சங் கோதப்                                                670
பாற்கடல் சேர்ப்பன் அருள்க; சார்ங்கவில்
கையன் அருள்க; கன்னல் அருள்க;
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம்
வில்லும் ஏந்துவோன் அருள்க; வீயா
மல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க;
ஞானப் பிராஅன் அருள்க; பரி முகமாய்
ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க;
வெற்றிக் கருடக் கொடியோன் அருள்க;
கற்றைக் குழலான் அருள்க; விடமுடைப்
பாம்பின் மேல்நடம் பயின்றான் அருள்க;                                                 680
ஆமகிழ்ந் துகந்தவை மேய்ப்பான் அருள்க;
மும்மை மூர்த்தி அருள்க; இவ்வுலகில்
எம்மாண்பு மானான் அருள்க; என்னுடை
நாயகன் அருள்க; நான்மூர்த்தி அருள்க;
வேய்ங்குழ லூதும் வித்தகன் அருள்க;
ஆழியொன் றேந்தியே கூற்றே அருள்க;
ஊழி பெயர்த்தான் அருள்க; ஒருநல்
சுற்றம் அருள்க; சுற்றுநின் றகலா
உற்றார் இலாத மாயவன் அருள்க;                                                            690
உணவுப் புள்ளேறி ஊர்வான் அருள்க;
அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க;
அறிவினுக் கரிய பிரானவன் அருள்க;
குறிய மாணுருக் கூத்தன் அருள்க;
ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க;
ஒதம் போல்கிளர் வேதநீரன் அருள்க;
ஆவிக் கொருகொள் கொம்பே அருள்க;
கோவி நாயகன் அருள்க;கூரார்
ஆழிபணி கொண்டவன் அருள்க;பிறவிகள்
ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க;                                                        700
தோற்றக் கேடவை இல்லவன் அருள்க;
ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க;
இம்மைக் கும்மினி ஏழேழ் பிறவி
அம்மைக் குங்கதி யாவான் அருள்க;
இமையோர்க் கரிய அப்பன் அருள்க;
இமையோர் நாயகன் அருள்க; இமையோர்
பெருமான் அருள்க;பெரியான் அருள்க;
அருமா மறைப்பண் ணகத்தான் அருள்க;
இலங்கு சோதியன்  அருள்க; மதிள்நீர்
இலங்கை மானகர் பொடித்தான் அருள்க;                                                  710
இருளன்ன மேனியான் அருள்க; சகடம்
உருள உதைத்தான் அருள்க; இன்னமுத
வெள்ளம் அருள்க; விமலன் அருள்க;
பள்ளிமா மாயன் அருள்க; பற்றிலார்
பற்றநின்றவன் அருள்க; மூவுலகும்
முற்ற விரிசுடர் முடியன் அருள்க;
இன்னப்பா அருள்க; இன்பவாறு அருள்க;
பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க;
ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க;                                                721
தேட்ட ருந்திறல் தேனே அருள்க;
உணர்வினிக் கரியான் அருள்க; இருப்பிணி
அணிநெடுந் தோள்புணர்ந் தவனே அருள்க;
உலகு செய்பவன் அருள்க; ஏழுசேர்
உலகம் ஆண்டவன் அருள்க; உலகேழும்
புகக்க ரந்ததிரு வயிற்றான் அருள்க;
மகர நெடுங்குழைக் காதன் அருள்க;
எண்ணற் கரியான் அருள்க; கருமுகில்
வண்ணன் அருள்க; வரம்புக் கடங்காக்                                                      730
கீர்த்தியான் அருள்க; கேடிலா உணர்வின்
மூர்த்தியான் அருள்க; முற்ற மண்ணிடம்
தாவிவிண் ணுறநீண் டளந்தான் அருள்க;
ஓவரி வெஞ்சிலை வலவன் அருள்க;
உயர்வினை யேதரும் ஒண்சுடர் அருள்க;
உயர நின்றதோர் சோதீ அருள்க;
எளிவரும் இயல்வினன் அருள்க; ஞாலம்
அளந்திடந் துண்ட அண்ணல் அருள்க;
ஞாலம் தத்தும் பாதன் அருள்க;
ஞாலமுண் டுமிழ்ந்த மாஅல் அருள்க;                                                           740
உம்பர் கோமான் அருள்க; துழாய்முடி
நம்பெரு மானே அருள்க; இலனது
உடையன் இதுவென நினைவரியான் அருள்க;
விடையேழ் வீயப் பொருதான் அருள்க;
மாகத் திளமதி சேர்சடை யானைப்
பாகத்து வைத்தான் அருள்க; ஞானத்தால்
ஆகத்து அனைப்பார்க்கு அருள்வான் அருள்க;
நாகத் தணையான் அருள்க; நற்பல
தாமரை நாண்மலர்க்  கையவன் அருள்க;
தாமரை மின்னிடை நாகன் அருள்க;
என்றும் இனியான் அருள்க; பலவென                                                          750
ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க;
என்னுடைச் சுற்றம் அருள்க; தொண்டர்க்
கின்னருள் புரிவோன் அருள்க; எந்நின்ற
யோனியு மாகிப் பிறந்தவன் அருள்க;
ஞானத் தின்னொளி உருவன் அருள்க;
ஏறு சேவகன் அருள்க; அன்றிலங்கை
நீறு செய்த வீரன் அருள்க;
எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க;
நல்லன நமக்கே தருவான் அருள்க;
எண்ணில் தொல்புக ழீசன் அருள்க;                                                               760
நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க;
குரங்கையா ளுகந்த கோமான் அருள்க;
விரிந்த புகழான் அருள்க; கைகழால
நேமியான் அருள்க;நேசன் அருள்க;
மாமணி வண்ணன் அருள்க; சோத்தம்
பிரானவன் அருள்க; பெம்மான் அருள்க;
சராச ரத்தைவீ டேற்றினான் அருள்க;
எழிலேறு அருள்க; ஏகமூர்த்தி அருள்க;                                                            771
தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க;
முனிவர்க் கருள்தரும் தவமே அருள்க;
தனியேன் வாழ்முதல் அருள்க; வானுளார்
அறிய லாகா வானவன் அருள்க;
நிறைமூ வுலகுக்கும் நாயகன் அருள்க;
எள்க லிராக மிலாதான் அருள்க;
உள்கலந் தார்க்கோர் அமுதே அருள்க;
கொள்கை கொளாமை யிலாதான் அருள்க;
அளிநன் குடையான் அருள்க; எண்மீ                                                               780
தியன்ற புறவண் டத்தான் அருள்க;
மயங்கச் சங்கம்வாய் வைத்தான் அருள்க;
என்குல தெய்வம் அருள்க; அசுரர்
வன்குலம் வேர்மருங் கருத்தான் அருள்க;
கூனேறு சங்கம் இடத்தான் அருள்க;
கூனே சிதையவில் தெறித்தான் அருள்க;
கோமளப் பிள்ளை அருள்க; அந்தணர்
ஓமம் ஆனான் அருள்க; ஓமத்து
உச்சியான் அருள்க; உயிராளன் அருள்க;                                                           790
பச்சைமா மலைபோல் மேனியன் அருள்க;
அனைத்துல கும்விளக்கும் சோதீ அருள்க;
புனத்துழாய் மாலையான் அருள்க; பொறியுணர்
வகையிலான் அருள்க; ஐவர் தூதனாய்ச்
சவையில் சென்ற மாயனே அருள்க;
துற்றி யேழுல குண்டவன் அருள்க;
கொற்றவன் அருள்க; குழலழகன் அருள்க;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க;
படியிது வெனலாம் படியலான் அருள்க;                                                               800.

                                                        5ஆவது இறுதிப் பகுதி "செயசெய" (801 -1008 நாமங்கள்)   தொடரும்
May 24

விஷ்ணு சஹஸ்ரநாமம் -- தமிழில்

.3.
 
மதகளி றன்னான் வெல்க; மதுரைப்
பதியினன் வெல்க; பத்தராவி வெல்க;
அசுரர் கூற்றம் வெல்க; மணித்தேர்
விசயற் கூர்ந்தான் வெல்க; யசோதைதன்
சிங்கம் வெல்க; சிலையாளன் வெல்க;
செங்கதிர் முடியான் வெல்க; அடலாழிப்
பிரானவன் வெல்க; பீடுடையான் வெல்க;  410.
இராவ ணாந்தகன் வெல்க;அந்தமில்
புகழான் வெல்க;புதுனலுருவன் வெல்க;
திகழும் பவளத் தொளியான் வெல்க;
அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
ஆநிரை மேய்த்தான் வெல்க;வைத்த
மாநிதி வெல்க;மண் ணிரந்தான் வெல்க;
மத்த மாமலை தாங்கீ வெல்க;             420
சித்திரத் தேர்வலான் வெல்க;சீற்றம்
இல்லவன் வெல்க;இழுதுண்டான் வெல்க;
மல்லரை யட்டான் வெல்க;மாசறு
சோதீ வெல்க;சுடர்விடு கமலப்
பாதன் வெல்க;பகலாளன் வெல்க;
படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க;    431
அரட்டன் வெல்க;அரியுருவன் வெல்க;
இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
ஓணத்தான் வெல்க;உந்தியில் அயனைப்
படைத்தான் வெல்க; பருவரையாற் கடலை
அடைத்தான் வெல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் படையான் வெல்க;
அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
அரியுரு வாகி யந்தியம் போதில்
அரியை யழித்தவன் வெல்க; அமரர்
பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க;  440
மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும்
கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
பத்திரா காரன் வெல்க;பழமறை
தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
ஆடும் கருளக் கொடியான் வெல்க;
அடைந்தார்க் கணியன் வெல்க;கடலைக்
கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
காண்டற் கரியவன் வெல்க;புள்வாய்                450
கீண்டான் வெல்க;கேடிலான் வெல்க;
கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
வையம் அளந்தான் வெல்க;யாவையும்
ஆனான் வெல்க;அமுதுண்டான் வெல்க;
ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
அவலம் களைவான் வெல்க; என்றானும்
அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
அறவ னாயகன் வெல்க;மனத்து                    460
அறமுடை யோர்கதி வெல்க;அறுசுவை
அடிசில் வெல்க;ஆதிப்பிரான் வெல்க;
வடிசங்கு கொண்டான் வெல்க;வண்புகழ்
நாரணன் வெல்க;நாயகன் வெல்க;
ஆர மார்பன் வெல்க;அண்டர்
தங்கோன் வெல்க;தம்பிரான் வெல்க;
சங்கமிடந்தான் வெல்க;சனகன்                    470
மருமகன் வெல்க;மதுசூதன் வெல்க;
உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
நங்கள் நாதன் வெல்க;நல்வினைக்கு
இன்னமுது வெல்க;ஏழிசை வெல்க;
பிள்ளை மணாளன் வெல்க;வலத்துப்
பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க;                480
அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
அனந்த சயனன் வெல்க;இலங்கையைச்
சினந்தனால் செற்ற கோமகன் வெல்க; 
ஆய்ப்பாடி நம்பி வெல்க;நஞ்சுகால்
பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
உலகளிப்  பானடி நிமிர்த்தான் வெல்க;
உலகமூன் றுடையான் வெல்க;உறங்குவான்
போல யோகுசெய் பெருமான் வெல்க;
காலசக் கரத்தான் வெல்க;காலநேமி               490
காலன் வெல்க; காமரூபி வெல்க;
பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
மறைப்பெ ரும்பொருள் வெல்க; மனனுணர்
அளவிலன் வெல்க;அண்டவாணன் வெல்க;
வளரொளி யீசன் வெல்க;வருநல்
தொல்கதி வெல்க;தூமொழியான் வெல்க;          500
செல்வமல்கு சீரான் வெல்க;செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
வைப்பே வெல்க;மருந்தே வெல்க;
வியலிட முண்டான் வெல்க;நமன் தமர்க்கு
அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
ஆய்மகள் அன்பன் வெல்க;வஞ்சப்
பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
அழகியான் வெல்க;அலங்காரன் வெல்க;            510
தழலைந் தோம்பி வெல்க; தக்கணைக்கு
மிக்கான் வெல்க;விண்ணவர் கோன் வெல்க;
திக்குநிறை புகழான் வெல்க;திருவாழ்
மார்பன் வெல்க;மதுரவாறு வெல்க;
கார்மலி வண்ணன் வெல்க;குவலயத்
தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
செங்கமல நாபன் வெல்க;நரங்கலந்த               520
சிங்கம் வெல்க;சிந்தை தன்னுள்
நீங்காதிருந்த திருவே வெல்க;
தேங்கோதநீர் உருவன் வெல்க;
பிள்ளையரசு வெல்க;பிள்ளைப்பிரான் வெல்க;
வெள்ளியான் வெல்க;வேதமயன் வெல்க;
வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;ஆழி
வலவன் வெல்க;வாயழகன் வெல்க;                 531
நிலமுன மிடந்தான் வெல்க;நீலச்
சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
பாரதம் பொருதோன் வெல்க;பாரளந்த
பேரரசு வெல்க;பெற்றமாளி வெல்க;
காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
வேதத்து அமுதமும் பயனும் வெல்க;                 540
வேத முதல்வன் வெல்க;வேதத்தின்
சுவைப் பயன் வெல்க;சுடரான் வெல்க;
நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
ஆதி மூர்த்தீ வெல்க;அந்தியம்
போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
ஆமையும் ஆனவன் வெல்க; துளவுசேர்
தாமநீண் முடியன் வெல்க;தனிப்பெரு
மூர்த்தி வெல்க; முண்டியான் சாபம்
தீர்த்தான் வெல்க;தெய்வம் வெல்க;
வளைவணற் கிளையவன் வெல்க;தயிரொடு          551
அளைவெணெய் உண்டான் வெல்க;மெய்ந்நலம்
தருவான் வெல்க;சாமமா மேனி
உருவான் வெல்க;உய்யவுலகு படைத்து
உண்டமணி வயிறன் வெல்க; அண்டமாய்
எண்டிசைக் குமாதி வெல்க;அண்டமாண்
டிருப்பான் வெல்க;இருங்கைம் மாவின்
மருப்பொசித் திட்டான் வெல்க;மரமெய்த
திறலான் வெல்க;தீமனத் தரக்கர்                     560
திறலை யழித்தான் வெல்க;திருவின்
மணாளன் வெல்க;மண்ணுயிர்க் கெல்லாம்
கணாளன் வெல்க;மண்ணழகன் வெல்க;
கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
வைகுந்த நாதன் வெல்க; வைகுந்தச்
செல்வன் வெல்க;செங்கணான் வெல்க;
தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
கூரா ராழிப் படையவன் வெல்க;                    570
காரேழ் கடலேழ் மலையே ழுலகும்
உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
குடமாடு கூத்தன் வெல்க;குவளை
மலர்வணன் வெல்க;மண்கொண்டான் வெல்க;
புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
உலகுண்ட வாயன் வெல்க;ஊழியேழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க;                    580
கடல்படா அமுதே வெல்க;அம்பொனின்
சுடரே வெல்க;நற் சோதீ வெல்க;
அமரர் முழுமுதல் வெல்க;அமரர்க்கு
அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
அமரர்க் கரியான் வெல்க;பொதிசுவை
அமுதம் வெல்க;அறமுதல்வன் வெல்க;
அயனை யீன்றவன் வெல்க;ஆலினிலைத்
துயின் றவன் வெல்க;துவரைக்கோன் வெல்க;     591
அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
விழுக்கையாளன் வெல்க;துளவம்
தழைக்கும் மார்பன் வெல்க;அளத்தற்கு
அரியவன் வெல்க;அயோத்தி யுளார்க்கு
உரியவன் வெல்க;உயிரளிப்பான் வெல்க;
ஏழுல குக்குயிர் வெல்க;ஆற்றல்
ஆழியங் கையமர் பெருமான் வெல்க;              600.
                                                                  தொடர்வது   "அருள்க"
 
March 07

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்

                         2.

புறந்தொழு வார்க்குப் பொய்யன் வாழ்க;
மறைம லர்ச்சுடர் வாழ்க; மறையோர்
கண்ணான் வாழ்க; கவியளான் வாழ்க;
பண்ணுளான் வாழ்க; பண்பன் வாழ்க;
மண்மகள் கேள்வன் வாழ்க;  மாக
விண்முதல் நாயகன் வாழ்க; வித்தகப்
பிள்ளை வாழ்க; பித்தன் வாழ்க;
ஒள்ளியான் வாழ்க; உயர்ந்தான் வாழ்க;
மண்பகர் கொண்டான் வாழ்க; நறுவிய
தண்துழாய் வேதியன் வாழ்க; மண்புரை
வையம் இடத்த வராகன் வாழ்க;
அய்யன் வாழ்க; ஆத்தன் வாழ்க;
பரிவாய் மீண்ட சீரான் வாழ்க;
கரிய முகில்புரை மேனியன் வாழ்க;
கலையார் சௌற்பொருள் வாழ்க; தெய்வத்
தலைவன் வாழ்க; தஞ்சன் வாழ்க;
பண்புடை வேதம் பயந்தான் வாழ்க;
வெண்புரி நாலுடை மார்பன் வாழ்க;
தனிமாத் தெய்வம் வாழ்க; அமரர்
முனிவர் விழுங்குங்கன் னற்கனி வாழ்க;
ஏலு மறைப் பொருள் வாழ்க; இறப்பெதிர்
காலக் கழிவும் ஆனவன் வாழ்க;
இன்பன் வாழ்க; ஈசன் வாழ்க;
அன்பன் வாழ்க; அறவன் வாழ்க;
அறமுய லாழிப் படையவன் வாழ்க;
உறியார் வெண்ணெயுண் டுகந்தான் வாழ்க;
செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க;
சுந்தரன் வாழ்க; சூழ்ச்சி ஞானச்
சுடரொளி வாழ்க; சோதீ வாழ்க;
உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க;
ஆடற் பறவையன் வாழ்க; எடுப்பும்
ஈடுமில் ஈசன் வாழ்க; உட்குடை
அசுரர்  உயிரெலா முண்டவன் வாழ்க;
பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க;
எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க;
எண்ணன் வாழ்க; எண்ணுவா ரிடரைக்
களைவான் வாழ்க; கற் றாயன் வாழ்க;
கிளரொளி மாயன் வாழ்க; காள
மேகம் வாழ்க; மெய்ம்மை வாழ்க;
நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க;
வேதன் வாழ்க; வீடுடையான் வாழ்க;
போதகம் வீழப் பொருதான் வாழ்க;
வைய முதல்வன் வாழ்க; ஆண் டளக்கும்
ஐயன் வாழ்க; அரங்கன் வாழ்க;
ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க;
ஊற்றம் உடையான் வாழ்க; செங்கட்
கருமுகில் வாழ்க; காரணம் கிரிசை
கரும முதல்வன் வாழ்க; கன்னலின்
கட்டியே வாழ்க; கரிய குழலுடைக்
குட்டன் வாழ்க; கூற்றம் வாழ்க;
கருவினை வண்ணன் வாழ்க; கருமமும்
கரும பலனும் ஆவோன் வாழ்க;
தேவர் விருத்தன் வாழ்க; தேவர்க்கும்
தேவன் வாழ்க; தெய்வம் மூவரில்
முதல்வன் வாழ்க; முகுந்தன் வாழ்க;
சதிரன் வாழ்க; சந்தோகன் வாழ்க;
சுடர்கொள் சோதீ வாழ்க; கடலுள்
கிடந்தவன் வாழ்க; கேழல் வாழ்க;
பவித்திரன் வாழ்க; பரபரன் வாழ்க;
திவத்தை யருள்பவன் வாழ்க; கணக்கறு
தலத்தனன் வாழ்க; நம்பன் வாழ்க;
நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க;
பீதக ஆடையன் வாழ்க; வேள்வியும்
வேதமு மானான் வாழ்க; வேண்டிற்று
எல்லாம் தருபவன் வாழ்க; யார்க்கும்
நல்லான் வாழ்க; நம்பிரான் வாழ்க;
கூடாரை வெலுஞ்சீர்க் கோவிந்தன் வாழ்க;
ஓடாப் படையான் வாழ்க; மண்ணிக்
குறுங்கயிற் றாற்கட் டுண்டவன் வாழ்க;
நிறங்கிளர் சோதி நெடுந்தசை வாழ்க;
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் வாழ்க;
மறைப்பொருள் வாழ்க; மாயன் வாழ்க;
மன்ற மரக்கூத் தாடினான் வாழ்க;
என்றும் அரியான் வாழ்க; ஆழியால்
அன்றங் காழியை மறைத்தான் வாழ்க;
வென்றிநீர் மழுவன் வாழ்க; வினைதீர்
மருந்தே வாழ்க; மணியே வாழ்க;
அருந்தேவன் வாழ்க; அழகன் வாழ்க;
அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க;
தன்னடி யார்மனத் தென்றும்தேன் வாழ்க;
மனத்துக் கினியான் வாழ்க; மாசற்றார்
மனத்துளான் வாழ்க; மணிக்குன்று வாழ்க;
மதிகோள் விடுத்த தேவன் வாழ்க;
மதியில் நீசர்சென் றடையான் வாழ்க;
முடிகளா யிரத்தான் வாழ்க; அவனி
அடிமூன் றிரந்து கொண்டவன் வாழ்க;
அமுதங் கொண்டான் வாழ்க; அமரர்தம்
அமுதே வாழ்க; அறிவன் வாழ்க;
ஆயிரம் பேருடை யம்மான் வாழ்க;
ஆயன் வாழ்க; ஆதியான் வாழ்க;
பணிலம்வாய் வைத்தான் வாழ்க; கன்று
குணிலா எறிந்தான் வாழ்க; கொள்ளக்
குறைவிலன் வாழ்க; கோவலன் வாழ்க;
மறுகலி லீசன் வாழ்க; மறைநான்கும்
ஓதினான் வாழ்க; ஊழி வாழ்க;
ஆதியம் புருடன் வாழ்க; ஆயர்க்கு
அதிபதி வாழ்க; ஆளன் வாழ்க;
நிதியன் வாழ்க; நெடுமால் வாழ்க;
படிவான மிறந்த பரமன் வாழ்க;
தடவரைத் தோளன் வாழ்க; தூய
பெருநீர் யமுனைத் முறைவன் வாழ்க;
எரிநீர் வளிவான் மண்ணான் வாழ்க;
கல்விநாதன் வாழ்க; பயில்நூல்
நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க;
பூவணை வாழ்க; பூவனை மேவிய
தேவி மணாளன் வாழ்க; மைதோய்
சோதி வாழ்க; தூயான் வாழ்க;
ஆதி வராகமும் ஆனான் வாழ்க;
ஆழியங் கையில் கொண்டான் வாழ்க;
வேழப் போதகம் வாழ்க; அசுரரைத்
துணிப்பான் வாழ்க; துயக்கன் வாழ்க;
கணக்கில் கீர்த்தியான் வாழ்க; அடியார்க்கு
அருள்பவன் வாழ்க; அண்டமூ டுருவப்
பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க; அஞ்சன
மேனியன் வாழ்க; வெள்ளை மூர்த்தி
ஆனவன் வாழ்க; அருங்கல வுருவின்
ஆயர் பெருமகன் வாழ்க; தலைகண்
ஆயிரமுடையான் வாழ்க; அடியார்க்கு
மெய்யன் வாழ்க; மின்னும் ஆழியங்
கையன் வாழ்க; காலிகள் மேய்க்க
வல்லவன் வாழ்க; வல்லான் வாழ்க;
அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க;
எய்ப்பினில் வைப்பே வாழ்க; அண்டத்
தப்புறத் துய்த்திடும் ஐயன் வாழ்க;
அணிகொள் மரகதம் வாழ்க; தாள் அடைந்தார்க்கு
அணியன் வாழ்க; அனந்தன் வாழ்க;
அமுதினு மாற்ற இனியான் வாழ்க;
தமர்கட் கெளியான் வாழ்க; தேவகி
சிறுவன் வாழ்க; சிட்டன் வாழ்க;
அறிவுப்பயன் வாழ்க; ஆவி வாழ்க;
வானோர் நாயன் வாழ்க; தனக்குத்
தானே உவமன் வாழ்க; தேடற்கு
அறியவன் வாழ்க; ஆட்கொள்ள வல்ல
பெருமாள் வாழ்க; பெருந்தகை வாழ்க;
பேதியா இன்ப வெள்ளம் வாழ்க;
வேதநல் விளக்கே வாழ்க; வேதப்
புனிதன் வாழ்க; புணைவன் வாழ்க;
கனிவார் வீட்டு இன்பம் வாழ்க;
கங்கை போதரக் கால் நிமிர்ந்தான் வாழ்க;
நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க;
யாதவன் வாழ்க; யாழிசை வாழ்க;
ஆதியம் பெருமான் வாழ்க; வேதம்
கண்டான் வாழ்க; கைம்மா துன்பம்
விண்டான் வாழ்க; விண்ணாளி வாழ்க;
வில்லான் வாழ்க; விபீட ணற்கு
நல்லான் வாழ்க; நரநா ரணனாய்
அறநூல் விரித்தான் வாழ்க; வேள்வியில்
குறளாய் நிமிர்ந்த வஞ்சன் வாழ்க;
அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க;
கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க;
அமரர் கோமான் வாழ்க; என்றும்
இமையவர்க் கரியான் வாழ்க; இமையவர்
குலமுதல் வாழ்க; குலக்குமரன் வாழ்க;
அலைகடல் வண்ணன் வாழ்க; அலைகடற்
பள்ளியான் வாழ்க; பரமேட்டி வாழ்க;
வெள்ளத் தரவில் துயின்றான் வாழ்க;
குன்றா ரும்திறல் தோளன் வாழ்க;
கன்றால் விளவெறிந்த காளை வாழ்க;            400

                         தொடர்வது  "வெல்க "

March 02

Gmail - [Jeeyar Educational Trust] Digest Number 1849 - rajamragu@gmail.com

இணையத்தில் படித்தது

1. Don't miss even a single word..... Good Conversation
   Posted by: "Satuluri Madhava" madhavaramanujadasan@gmail.com madhavaramanujadasan
   Date: Sun Mar 1, 2009 6:53 am ((PST))
An atheist professor of philosophy speaks to his class on the problem science has with God, The Almighty. He asks one of his new students to stand and.....
Prof: So you believe in God?
Student: Absolutely, sir.
Prof: Is God good?
Student:Sure.
Prof:Is God all-powerful?
Student: Yes.
Prof: My brother died of cancer even though he prayed to God to heal him. Most of us would attempt to help others who are ill. But God didn't. How is this God good then? Hmm?
(Student is silent.)
Prof: You can't answer, can you? Let's start again, young fellow. Is God good?
Student: Yes.
Prof: Is Satan good?
Student: No..
Prof: Where does Satan come from?
Student: From...God...
Prof: That's right. Tell me son, is there evil in this world?
Student: Yes..
Prof: Evil is everywhere, isn't it? And God did make everything. Correct?
Student: Yes.
Prof: So who created evil?
(Student does not answer.)
Prof: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don't they?
Student: Yes, sir.
Prof: So, who created them?
(Student has no answer.)
Prof: Science says you have 5 senses you use to identify and observe the world around you. Tell me, son...Have you ever seen God?
Student: No, sir.
Prof: Tell us if you have ever heard your God?
Student: No, sir.
Prof: Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter?
Student: No, sir. I'm afraid I haven't.
Prof: Yet you still believe in Him?
Student: Yes..
Prof: According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn't exist. What do you say to that, son?
Student: Nothing. I only have my faith.
Prof: Yes. Faith. And that is the problem science has..
Student: Professor, is there such a thing as heat?
Prof: Yes.
Student: And is there such a thing as cold?
Prof: Yes.
Student: No sir. There isn't.
(The lecture theater becomes very quiet with this turn of events.)
Student: Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat. But we don't have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we can't go any further after that. There is no such thing as cold .. Cold is only a word we use to describe the absence of heat .. We cannot measure cold. Heat is energy . Cold is not the opposite of heat, sir, just the absence of it .
(There is pin-drop silence in the lecture theater.)
Student: What about darkness, Professor? Is there such a thing as darkness?
Prof: Yes.. What is night if there isn't darkness?
Student: You're wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light....But if you have no light constantly, you have nothing and it's called darkness, isn't it? In reality, darkness isn't. If it were you would be able to make darkness darker, wouldn't you?
Prof: So what is the point you are making, young man?
Student: Sir, my point is your philosophical premise is flawed.
Prof: Flawed? Can you explain how?
Student: Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure. Sir, science can't even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one. To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is not the opposite of life: just the absence of it.
Now tell me, Professor. Do you teach your students that they evolved from a monkey?
Prof: If you are referring to the natural evolutionary process, yes, of course, I do.
Student: Have you ever observed evolution with your own eyes, sir?
(The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.)
Student: Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavor, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher? (The class is in uproar.)
Student: Is there anyone in the class who has ever seen the Professor's brain?
(The class breaks out into laughter.)
Student: Is there anyone here who has ever heard the Professor's brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain, sir.
With all due respect, sir, how do we then trust your lectures, sir? (The room is silent... The professor stares at the student, his face
unfathomable.)
Prof: I guess you'll have to take them on faith, son.
Student: That is it sir... *The link between man & god is FAITH *. That is all that keeps things moving & alive..
NB:  this is a true story
Andal Tiruvadigale Saranam
Madhava Ramanuja dasan.

Gmail - [Jeeyar Educational Trust] Digest Number 1849 - rajamragu@gmail.com

March 01

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் 1963ல் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வெளியிட்ட 'தமிழில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்" நூலிலிருந்து முதல் 200 நாமாவளிகள் இங்கே ! திவ்ய ப்ரபந்தத்திலிருந்து தொகுத்திருக்கிறார்கள்.
 
 
 

 அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
 உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;
 மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
 பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:
 பூமகள் நாயக போற்றி; ஓசை
 மாமத யானை உதைத்தவ போற்றி;
 அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
 பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;
 அத்தா போற்றி; அரியே போற்றி;
  பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;
  அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;
அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;
குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;
அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;
 
 
நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;
முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;
கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;
அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி;  நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி;            200.
             வாழ்த்து 200 தொடரும்.......